5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியீடு

0 7441

உத்தரபிரதேசம்,  பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கான சட்டப் பேரவை தேர்தல் கடந்த பிப்ரவரி 10 தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது.

அதேபோல் 60 எம்.எல்.ஏ. க்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப் பேரவை தேர்தல் இரு கட்டங்களாகவும், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு இயந்திரங்கள், வாக்குப் பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டு மூடி சீல் வைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் உத்தரபிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி தொடங்கி உள்ளது.

காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கி உள்ளன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.

வாக்கு எண்ணும் பணியில் சுமார் 50 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு 5 மாநிலங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments