ரஷ்ய தாக்குதலுக்கு அஞ்சி இர்பின் நகரை விட்டு வெளியேறும் மக்கள்: தந்தையை பிரிய மனமில்லாமல் அடம் பிடித்து அழுத குழந்தை

0 1628

காவல்துறை அதிகாரியான தன் தந்தையை பிரிய மனமில்லாமல் அழுது அடம் பிடிக்கும் உக்ரைனிய குழந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

இர்பின் நகர் மீது ரஷ்ய ராணுவம் குண்டு மழை பொழிந்ததால் மக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகளுடன் அந்நகரை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

இரண்டு கை குழந்தைகளுடன் கிளம்பிய மனைவியை வழியனுப்பிய காவல்துறை அதிகாரியை அவரது குழந்தை கட்டி அனைத்து கதறி அழுதது.

தந்தை கொடுத்த சாக்லெட்டை வாங்க மறுத்து, மழலை கைகளால் அவரின் தலை கவசத்தை அடித்து அடம் பிடித்த காட்சிகள் காண்போரை கண்கலங்க செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments