உக்ரைனில் பொதுமக்களைக் கொல்வதாக ரஷ்ய வீரர்கள் மீது குற்றச்சாட்டு

0 1875

உக்ரைனில் பொதுமக்கள் வாகனங்கள் மீது ரஷ்ய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தலைநகர் கீவ்-க்கு அருகே உள்ள மகரிவ் நகரில் பொதுமக்களைக் கொன்றதாக ரஷ்யா மீது புகார் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த திங்களன்று இனிப்பகத்தின் மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சில் 13 பேர் உயிரிழந்த நிலையில், ஆதரவற்றோர் நிலையத்திற்கு ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதலில் 3 ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments