கண்ணைக் கட்டிக் கொண்டு 106 தேங்காயை துல்லியமாக உடைத்து மாணவி சாதனை

0 1974
கண்ணைக் கட்டிக் கொண்டு 106 தேங்காயை துல்லியமாக உடைத்து மாணவி சாதனை

உலக மகளிர் தினத்தையொட்டி திருவண்ணாமலையைச் சேர்ந்த பள்ளி மாணவி, கண்ணை கட்டிக் கொண்டு தனது தங்கையை சுற்றி அடுக்கி வைக்கப்பட்டிருந்த 106 தேங்காய்களை 2 நிமிடங்களில் துல்லியமாக உடைத்து சாதனை படைத்துள்ளார்.

முனுகபட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி சுருதி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கண்ணை கட்டிக் கொண்டு சுமார் 36 கிலோ மீட்டர் சைக்கிளிள் பயணித்து கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இந்நிலையில், முனுகபட்டு அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது சகோதரியை நடுவே படுக்க வைத்து, சுத்தியல் மூலம் துல்லியமாக தேங்காய்களை உடைத்து புதிய சாதனை படைத்தார்.

மாணவியின் சாதனையை பதிவு செய்த பீனிக்ஸ் புக் ஆஃப் வேல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனம், மாணவிக்கு விருது வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments