தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 15068

கொரோனா தொற்று முடிவுக்கு வந்து விட்டதாக மக்கள் கருதுவதால், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் பங்கேற்றபின் பேட்டியளித்த அவர், கடந்த மெகா தடுப்பூசி முகாமில் 6 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

உக்ரைனில் இருந்து வந்துள்ள தமிழக மாணவர்களுக்கான கல்வி குறித்து மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்றும் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments