முதலமைச்சர் ஆணைக்கினங்க பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த பெண்

0 4229
முதலமைச்சர் ஆணைக்கினங்க பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த பெண்

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வென்ற கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் புவனேஷ்வரி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக பதவி விலக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதை அடுத்து, புவனேஷ்வரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதே போல, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்ற திமுகவின் தமிழ்ச்செல்வனும், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments