தூத்துக்குடியில் எஸ்.பி.சி.ஐ.டி போலீஸ் எனக் கூறி பல்வேறு வணிக நிறுவனங்கள், கடைகளில் பணம் வசூலித்த நபர் கைது.!

0 2774

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எஸ்.பி.சி.ஐ.டி போலீஸ் எனக் கூறி பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணம் வசூலித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கவுதம் என்பவரது அரிசிக் கடையில் நுழைந்த நபர் தான் ஒரு சி.ஐ.டி என்றும் கார் பழுதானதாகவும், மூன்றாயிரம் ரூபாய் பணம் தந்தால் வீட்டிற்கு சென்று கூகுள் பே மூலம் அனுப்புவதாக கூறியதாக சொல்லப்படுகிறது.

பேப்ரில் எழுதிக் கொடுத்த கூகுள் பே நம்பரை வாங்கிய நபர் கடைக்கு வெளியே சென்றதும் கிழித்து எறிந்ததாகவும், சந்தேகத்தின் பேரில் நபரை பிடித்து கவுதம் போலீசில் ஒப்படைத்ததாகவும் கூறப்படுகிறது.

விசாரணையில் பிடிபட்டவர் சிவகங்கை, இளையான்குடியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்றும் பல்வேறு கடைகளில் இதேபோல் பணம் வசூலித்தது தெரியவந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments