சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

0 1419
சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு


புது டெல்லியில் இருந்து கோயம்புத்தூருக்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி திடீரென தீ பற்றி எரிந்தது.

ஆவாரம்பாளையத்தில், சாலையோரம் நின்ற லாரியின் பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டதால் அதன் முன்புறம் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் நெருப்பை கட்டுப்படுத்துவதற்குள் லாரியின் முன்புறம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

கன்டெய்னருக்கு நெருப்பு பரவாததால், மருத்துவ உபகரணங்கள் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments