வாணியம்பாடியில் சாராயம் விற்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல்.. சாராயக் கொட்டகை தீ வைத்து எரிப்பு.!

0 1702

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சாராயம் விற்பது தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் சாராயக் கொட்டகை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது .

நேதாஜி நகரில் தொடர்ந்து சாராயம் விற்று வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி இளைஞர்கள் புகார் அளித்து இருந்தனர். இந்நிலையில், சாராய வியாபாரிகள் அடியாட்களை கொண்டு புகார் கொடுத்த இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்த து.இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் சாராய வியாபாரியின் கொட்டகையை தீயிட்டுக் கொளுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக 9 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments