உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதால் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க முடிந்தது ; பிரதமர் மோடி

0 1861
உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதால் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க முடிந்தது

உலக அளவில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், உக்ரைனில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க முடிந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சிம்பயாசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் மாணவர்கள் முன்னிலையில் பேசிய அவர், பெரிய நாடுகள் கூட உக்ரைனில் சிக்கிய தங்கள் மக்களை மீட்க சவாலை சந்தித்த நிலையில், இந்தியாவால் ஆயிரகணக்கானோரை மீட்க முடிந்ததாக கூறினார்.

மேலும், கொரோனா தொற்று பரவியபோது அதனை நாம் வெற்றிகரமாக கையாண்டது போல் தற்போதைய உக்ரைன் சூழ்நிலையையும் கையாள்வதாக குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments