டிராக்டரை பறிமுதல் செய்ததால் விவசாயி தற்கொலை ; ஸ்ரீராம் பைனான்ஸ் நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு

0 9501
ஸ்ரீராம் பைனான்ஸ் நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே விவசாயி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக ஸ்ரீராம் பைனான்ஸ் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேவனூரைச் சேர்ந்த சின்னதுரை என்ற அந்த விவசாயி 3 தவணைகளை செலுத்தவில்லை எனக் கூறி, அவரது டிராக்டரை ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனால் மனமுடைந்த சின்னதுரை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். இந்த நிலையில் ஸ்ரீராம் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே சார் ஆட்சியர் தலைமையில் செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உறவினர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments