ஹோண்டா பைக் ஷோரூமின் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் வெளியீடு

0 1374

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியில், ஹோண்டா பைக் ஷோரூமின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள், 8 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஒம்பிரகாஷ் சன் மோட்டார்ஸ் என்ற பெயரில் இயங்கி வரும் ஹோண்டா ஷோரூமில் பணிபுரியும் ஊழியர்கள் வாகனங்கள் விற்பனை செய்த பணத்தை மறுநாள் வங்கியில் செலுத்துவதற்காக ஷோரூமிலேயே வைத்துவிட்டு, வழக்கம் போல பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், அதிகாலை 3 மணியளவில் கடப்பாரையை வைத்து ஷட்டரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த ஹெல்மெட் மற்றும் மாஸ்க் அணிந்திருந்த மர்ம நபர்கள், கல்லாவில் வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

ஷோரூம் ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில், கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்களை மறைமலைநகர் போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments