ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி கார் லாரியில் மோதி விபத்து ; 2 குழந்தைகள் பலி

0 1497
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி கார் லாரியில் மோதி விபத்து ; 2 குழந்தைகள் பலி

கோயம்புத்தூரில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி கார், சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் மோதிய கோர விபத்தில் இரண்டு குழந்தைகள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

ஈரோட்டை சேர்ந்த நண்பர்களான நிசார் அலி, ராமச்சந்திரன், மோனிஷ் ஆகிய மூவரும், குடும்பத்தினருடன் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியிலுள்ள தர்ஹாவுக்கு ஆம்னி காரில் சென்றனர்.

பின்னர் நேற்றிரவு கோவை வழியாக வீட்டுக்கு திரும்பிய போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பின்பக்கமாக பலமாக மோதியதாக கூறப்படுகிறது.

லாரியில் டீசல் தீர்ந்துவிட்டதால் ஓட்டுநர் சாலையோரம் நிறுத்தி வைத்துவிட்டு டீசல் வாங்கச் சென்ற நேரம் பார்த்து விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காரில் இருந்த மோனிஷின் 2 குழந்தைகளும் உயிரிழந்த நிலையில், மற்ற ஏழு பேரும் படுகாயமடைந்தனர்.

காரை ஓட்டி வந்த மோனிஷ் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நிகழ்ந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments