சித்ரா ராமகிருஷ்ணாவிடம் உளவியல் சோதனை..!

0 1823

தேசியப் பங்குச்சந்தை முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவை மத்தியத் தடய அறிவியல் ஆய்வக உளவியலாளர்கள் உளவியல் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

தேசியப் பங்குச்சந்தை சர்வரில் இருந்து தரகு நிறுவனங்களுக்கு கோ லொக்கேசன் வழங்கியது, நிறுவனத்தின் ரகசியங்களைத் தெரிவித்தது ஆகியன தொடர்பாகச் சித்ரா ராமகிருஷ்ணா மீது சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில், அனைத்து முடிவுகளையும் இமயமலையில் உள்ள சாமியாரின் வழிகாட்டலின்படி எடுத்ததாகச் சித்ரா திரும்பத் திரும்பக் கூறிவருகிறார்.

சாமியாரை நேரில் பார்த்ததில்லை என்றும், மின்னஞ்சல் வழியாகத்தான் தகவல் பரிமாற்றம் நிகழ்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் அவரிடம் எந்தத் தகவலையும் பெற முடியவில்லை என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். .

இந்நிலையில் டெல்லியில் மத்தியத் தடய அறிவியல் ஆய்வகத்தின் உளவியல் வல்லுநர்களைக் கொண்டு சித்ராவிடம் உளவியல் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments