உக்ரைனின் மனநல மருத்துவமனையைக் கைப்பற்றிய ரஷ்யப் படையினர்.. 670 நோயாளிகள் பிணைக் கைதிகளாக சிக்கியுள்ளதாக தகவல்..!

0 1154
உக்ரைனின் கிவ் மாகாணத்தில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன.

உக்ரைனின் கிவ் மாகாணத்தில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன.

இதில் 670 நோயாளிகள் பிணைக் கைதிகளாக சிக்கியுள்ளதாக மாகாண ஆளுநர் குலேபா தெரிவித்துள்ளார். அவர்களை அங்கிருந்து எப்படி வெளியேற்றுவது என்று தெரியவில்லை என்றும் மருத்துவமனையில் மருந்துகள், குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில நோயாளிகள் பல ஆண்டுகளாக படுக்கையில் இருந்து எழ முடியாதவர்கள் .தனி கவனம் தேவைப்படுகிறவர்கள் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே ரஷ்யப் படைகள் கீவ் தலைநகரைக் கைப்பற்ற அக்கம் பக்கம் உள்ள சிறிய நகரங்களைக் கைப்பற்றி வருகின்றன. கார்க்கிவ் ,நிக்கோலேவ், செர்னிவ், சுமி ஆகிய நகரங்களில் ரஷ்யப் படைகள் வளைத்து விட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments