கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்கள் முழுமையாக மீட்பு.!

0 2468

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் இருந்த இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய அந்த அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி, கார்கிவ் நகரில் இருந்து மீட்டது போல சுமி நகரில் உள்ளவர்களையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

தற்போதைய சூழலில் சுமியில் போர் தொடர்வதால் மீட்பு பணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அங்கு இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்றும் அரிந்தம் பக்சி வலியுறுத்தியுள்ளார்.

இதுவரை, 63 விமான சேவைகள் மூலம் 13 ஆயிரத்து 300 இந்தியர்கள் உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பியுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2 ஆயிரத்து 900 பேர் இந்தியா வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments