காவல் ஆணையம் திருத்தம் செய்வது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

0 1724
காவல் ஆணையம் திருத்தம் செய்வது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக தமிழகத்தில் காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய உயர்நீதிமன்றம், திருத்தம் செய்வது குறித்து ஒருவாரத்தில் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

லாக் அப் மரணங்கள் போன்ற காவல்துறையினருக்கு எதிராக புகாரளிக்க காவல் ஆணையம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதன்படி தமிழகத்தில் காவல்துறையினருக்கு எதிராக மாநில அளவில் உள்துறை செயலாளர் தலைமையில் டி.ஜி.பி மற்றும் ஏடிஜிபி ஆகியோர் உறுப்பினர்களாகவும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் எஸ்.பி மற்றும் ஏ.எஸ்பி. ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

இது, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளதாக தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுதந்திரமான நபரை ஏன் புகார் ஆணையத்தில் நியமிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், காவல் துறையினருக்கு எதிரான புகார்களை, அவர்களே எப்படி நியாயமாக விசாரிக்க முடியும் எனவும் வினவினர்.

இதுசம்பந்தமான விதிகளில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என அரசு தரப்புக்கு ஒரு வார காலம் கால அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments