உக்ரைனில் இருந்து மேலும் 132 தமிழக மாணவர்கள் சென்னை வருகை.!

0 2066

உக்ரைனில் இருந்து டெல்லி வழியாக தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 132 மாணவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

உக்ரைனில் இருந்து இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 261 மாணவர்கள் ஏற்கனவே தமிழகம் வந்து சேர்ந்துள்ள நிலையில், 5வது நாளாக தற்போது சென்னை, கன்னியாகுமரி,மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 132 மாணவ மாணவிகள் வந்தனர்.

சென்னை வந்த மாணவர்களை தமிழக அரசின் அயலக தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வு துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

தற்போது வந்த மாணவர்களையும் சேர்த்து மொத்தம் 393 தமிழக மாணவர்கள் உக்ரைனில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments