பெரும் விபத்தை தவிர்த்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர்.. மாரடைப்பு ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே பலி.!

0 2885

ஆந்திராவில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அறிகுறி தென்பட்டதுமே பேருந்தை அவர் ஓரமாக நிறுத்திவிட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சித்தூர் மாவட்டத்தின் மதனப்பள்ளியில் இருந்து திருப்பதியை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்த போது, ஐராலா அருகே ஓட்டுநருக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

அசௌகரியத்தை உணர்ந்த அந்த ஓட்டுநர், உடனடியாக சுதாரித்து பேருந்தை ஓரங்கட்டியுள்ளார். சிறிது நேரத்திலேயே வலி அதிகமாகி மயங்கி விழுந்த ஓட்டுநர், மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments