உக்ரைனின் கீவ்-வில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் காயம் - மத்திய அமைச்சர் வி.கே சிங்

0 1943

உக்ரைன் தலைநகர் கீவ்-வில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய மாணவர் ஒருவர் காயமடைந்ததாக மத்திய அமைச்சர் வி.கே சிங் தெரிவித்துள்ளார்.

போலந்தின் ரேஸ்ஸோ விமான நிலையத்தில் பேசிய அவர், கீவ்-வில் இருந்து வெளியேற முயன்ற போது துப்பாக்கிச் சூட்டில் மாணவர் காயமடைந்ததாகவும் அந்த மாணவர் மீண்டும் நகருக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்,  குறைந்தபட்ச இழப்புடன் அதிகபட்சமான இந்தியர்களை உக்ரைனில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், மாணவர்கள் அனைவரும் கீவ்-வை விட்டு வெளியேற வேண்டுமென இந்திய தூதரகம் முன்னதாகவே அறிவுறுத்தியதாகவும் போரின் போது துப்பாக்கி தோட்டா யாருடைய மதத்தையோ தேசியத்தையோ பார்க்காது என்றும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments