ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல் - கட்டடம் இடிந்து 33 பேர் பலி

0 2216

உக்ரைன் செர்னியவ் பகுதியில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிக் கிடந்த 33 சடலங்களை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை 9வது நாளை எட்டிய நிலையில், ரஷ்யா வான் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

புனித நகரம் என அழைக்கப்படும் செர்னியவ்வில் ரஷ்யப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில கட்டடங்கள் இடிந்து விழுந்து உருக்குலைந்தன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 33 பேரின் உடலை மீட்டதாக அவசர சேவைகள் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments