ரூ.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

0 3154

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் அளித்த நில அபகரிப்பு புகாரில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செங்கல்பட்டு முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.

5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அபகரித்ததாக மகேஷ் எனபவர் தொடர்ந்த மனுவில், ஜாமீன் தரக் கோரி ஜெயக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை காணொலி மூலம்  செங்கல்பட்டு முதன்மை நீதிமன்ற நீதிபதி விசாரித்தார்.

ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் வெளியே வந்து சாட்சியங்களை அழிக்க முயற்சிகலாம் என எதிர்தரப்பினர் தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments