ஹெராயின் எனக் கூறி யூரியா உரத்தை விற்க முயற்சி - 4 பேர் கைது

0 2264

சென்னை மாதவரத்தில் ஹெராயின் எனக் கூறி யூரியா உரத்தை விற்க முயன்றதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாதவரம் சாலையில் ஹெராயின் கடத்தல் நடப்பதாக கிடைத்த தகவலில் சோதனையில் ஈடுபட்ட போலீசார் ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துராஜா, அருண்குமார், தமீம் அன்சாரி, முகமது சபி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த ஒரு கிலோ அளவிலான ஹெராயினை பரிசோதனைக்கு அனுப்பினர்.

சோதனை முடிவில் கைபற்றப்பட்டது ஹெராயின் இல்லை என்றும் யூரியா உரம் என்பதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் விசாரணையில் யூரியா உரத்தை ஹெராயின் எனக் கூறி நால்வரும் கத்தாரில் இருக்கும் சையது என்பவருக்கு விற்க முயன்றதாகவும், சையதின் உறவினரிடம் யூரியா உரத்தை கொடுக்க காத்திருந்த போது மாட்டிக் கொண்டதாக தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments