மனித உயிர்களை வதைத்து எந்தத் தீர்வையும் எட்டமுடியாது - இந்தியா

0 2843

மனித உயிர்களை வதைத்து எந்தத் தீர்வையும் எட்டமுடியாது. உக்ரைனில் போரை உடனடியாக நிறுத்தி பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

49 வது ஐநா.மனித உரிமைக் குழுவின் கூட்டம் நேற்று ஜெனிவாவில் நடைபெற்றது.இதில் கலந்துக் கொண்டு பேசிய இந்திய பிரதிநிதி , உக்ரைனில் உள்ள ஆயிரக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தார்.

இந்தியா உக்ரைனுக்கு உணவுப் பொருட்கள், மருந்து உள்பட மனிதாபிமான உதவிகளை வழங்கி வருவதாகவும் ஐநா.மனித உரிமைக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பிரச்சினைய அவசர பிரச்சினையாகக் கருதி போரின் வன்முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments