உக்ரைன் அதிகாரிகள் குடித்துவிட்டு தவறாக நடந்து கொண்டதாக மாணவிகள் புகார்: ரயில் ஏறும் போது கடுமையாக தாக்கி, லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு

0 3736

கார்கிவ் ரயில் நிலையத்தில் ரயில் ஏற இருந்த தங்களிடம் 200 டாலர் வரை உக்ரைன் அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாகவும், இரவு ரயில் நிலையத்தில் தங்கக் கூட பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகம் அங்கிருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவல் அளிப்பது தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இந்திய தூதரகம் வழங்கிய வழிகாட்டு முறைகள் தாமதமாக கிடைத்ததாகவும், 10 கிலோ மீட்டருக்கும் கூடுதலாக நடந்து சென்று ரயில் நிலையங்களை அடைந்தாலும் உக்ரைன் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, தங்களை அந்நாட்டு போலீஸ், ராணுவத்தினர் குச்சிகளை கொண்டு தாக்கியதாக இந்திய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் மது போதையில் தவறாக நடந்து கொண்டதாக இந்திய மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments