கண்களில் மிளகாய் பொடியை தூவி நகையை திருட முயன்ற பெண் கைது

0 2629
கண்களில் மிளகாய் பொடியை தூவி நகையை திருட முயன்ற பெண் கைது

புதுச்சேரியில் மேட்ரிமோனியில் பணி புரிந்து வரும் பெண் ஊழியரிடம் வேலை கேட்பது போல் பேச்சுக்கொடுத்து, அவரது கண்களில் மிளகாய் பொடியை தூவி, கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அதே பகுதியை சேர்ந்த ரேவதி என்ற பெண், திருமண தகவல் மையத்திற்கு சென்று, அங்கு பணியில் இருந்த ஊழியர் விஜயலட்சுமியிடம் தனக்கு வேலை வேண்டும் என கேட்டுள்ளார். அப்போது மையத்தின் உரிமையாளர் வெளியில் சென்றிருப்பதாகவும், மாலையில் வருமாறும் விஜயலட்சுமி கூறியுள்ளார்.

விஜயலட்சுமியின் கழுத்தில் தங்கச்சங்கிலி இருப்பதை நோட்டமிட்ட ரேவதி, வீட்டுக்கு செல்வது போல் சென்றுவிட்டு, மாலையில் அந்த மையத்திற்கு வந்து விஜயலட்சுமியிடம் வேலை தொடர்பாக பேச்சுக்கொடுத்துக்கொண்டே அவரது கண்களில் மிளகாய் பொடியை தூவி அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட விஜயலட்சுமி, அந்த ரேவதியின் கையை பிடித்து கடித்து கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ரேவதியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments