சினிமா தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தொடர்புடைய இடங்களில் 2ஆவது நாளாக சோதனை

0 4174

சினிமா தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், ஒரே முகவரியில் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுவதாக பதிவு செய்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு ஜே.எல் மைன்ஸ் மினரல்ஸ் என்ற நிறுவனத்தை முதலில் தொடங்கிய எல்ரெட் குமார், தற்போது வரை ரியல் எஸ்டேட், கட்டுமானம், பைனான்ஸ், சினிமா தயாரிப்பு நிறுவனம் என சுமார் 40 நிறுவனங்களை நடத்தி வருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதில், பெரும்பாலான நிறுவனங்கள் ஒரே முகவரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேற்கு தாம்பரத்தில் மூன்று முகவரிகளில் மட்டும் சுமார் 15 நிறுவனங்களை பதிவு செய்து இயங்கி வருவது போல் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனங்கள் பெயரளவில் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் வருவாய், செலவினங்கள் போலியாக காண்பிக்கப்பட்டு உள்ளதா?, அதன் மூலம் வரி ஏய்ப்பு நடந்துள்ளதா? என்பது குறித்து வருமான வரித் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments