ரஷ்யாவில் கார் உற்பத்தியை நிறுத்தியது "டொயோட்டா" நிறுவனம்

0 5451

உக்ரைன் மீது போர் தொடுத்ததை கண்டிக்கும் விதமாக டொயோட்டா நிறுவனம் ரஷ்யாவில் கார் உற்பத்தியை நிறுத்தி உள்ளது.

ரஷ்யா மீது உலக நாடுகளும், பெரு நிறுவனங்களும் பல்வேறு தடைகள் விதித்து வருகின்றன.

இந்நிலையில், உலகின் முன்னனி கார் நிறுவனமான ஜப்பான் நாட்டின் டொயோட்டா நிறுவனம், ரஷ்யாவில் கார் உற்பத்தி செய்வதையும், ரஷ்யாவிற்கு கார்களை ஏற்றுமதி செய்வதையும் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் புனித பீட்டர்ஸ்பெர்க் நகரில் உள்ள டொயோட்டா தொழிற்சாலையில், ஆண்டுக்கு 80,000 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது உற்பத்தி நிறுத்தப்படுவதால் அங்கு பணியாற்றும் 2,600 ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி ஆகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments