அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று வருகிறோம்... ரஷ்ய வீரர்கள் கதறி அழுதவண்ணம் ஒப்புதல் வாக்குமூலம்..!

0 5175

தாங்கள் போருக்கு அனுப்பப்படுவது தங்களுக்கே தெரியாது என்றும், அப்பாவிப் பொதுமக்களை கொன்று வருவதாகவும் ரஷ்ய ராணுவ வீரர்கள் பேட்டியளிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

உக்ரைன் வீரர்களால் சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர்கள் கதறி அழுத வண்ணம் வாக்குமூலம் கொடுத்தனர். அதில், அமைதியாக வாழும் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், தாங்கள் பீரங்கிகளுக்கு தீவனமாக மாறி விட்டதாகவும் தெரிவித்தனர்.

ரஷ்ய ராணுவத்தினர் தங்கள் சக வீரர்களின் சடலங்களைக் கூட எடுப்பதில்லை என்றும், இறுதிச் சடங்கு செய்வது கூட இல்லை என்று பிடிபட்ட ரஷ்ய வீரர்கள் ஆதங்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments