உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றிய விளையாட்டு வீரர்கள் 3 பேர் பலி

0 3762
உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றிய விளையாட்டு வீரர்கள் மூவர் ரஷ்யப் படையினருக்கு எதிரான போரில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றிய விளையாட்டு வீரர்கள் மூவர் ரஷ்யப் படையினருக்கு எதிரான போரில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ராணுவத்தில் டாங்க் கமாண்டராகப் பணியாற்றிய விட்டலி சபிலோ, கால்பந்தாட்ட அணியில் கோல் கீப்பர் ஆவார். இவர் வெள்ளியன்று தலைநகரைக் காக்கும் போரில் உயிரிழந்தார்.

மற்றொரு அணியில் விளையாடிய திமித்ரோ மார்ட்டினென்கோவும் ராணுவத்தில் பணியாற்றியவர்.

அடுக்குமாடிக் குடியிருப்பில் ரஷ்ய ராணுவம் குண்டு வீசித் தாக்கியதில் மார்ட்டினென்கோவும் அவர் தாயும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிரப் பனிச்சறுக்கு வீரரான மாலிசேவும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் உயிரிழந்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments