இந்தியாவின் வலிமை அதிகரிப்பதால், உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க முடிகிறது - பிரதமர் மோடி

0 2506

இந்தியாவின் வலிமை அதிகரிப்பதால், உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க முடிவதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ராபர்ட்ஸ்கன்ஜ் என்ற இடத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், ஆபரேசன் கங்கா என்ற பெயரில் இந்திய மாணவர்கள் மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை சுட்டிக்காட்டினார்.

உக்ரைனில் இருந்து இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தாயகம் திருப்பி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்காக மத்திய அமைச்சர் 4 பேர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments