உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்.. ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள்..!

0 2474

உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும் ரஷ்யப் படையினரின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கிருந்து பிற நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் செல்வதற்காக ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.

கிழக்கு உக்ரைனில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்ய விமானங்கள் இரவில் குண்டுவீசித் தாக்குதல் நடத்திய காட்சி வெளியாகியுள்ளது.

தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சான் நகரை ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள சாலைகளில் ராணுவ வாகனங்களில் ரோந்து சென்றனர்.

சுகுயேவ் விமானப்படைத்தளத்தில் இரவில் தாக்குதல் நடத்தப்பட்டபோது குண்டுவெடித்துத் தீப்பற்றி எரிந்த காட்சி வெளியாகியுள்ளது

உக்ரைனின் பல நகரங்களில் இரவிலும் குண்டுவீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இடிபாடுகளை அகற்றிப் பொதுமக்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் இரவுபகலாக ஈடுபட்டுள்ளனர்.

கார்க்கிவில் ரஷ்யப் படையினரின் தாக்குதலில் அடுக்குமாடிக் கட்டடங்கள் சேதமடைந்ததுடன், வாகனங்களும் எரிந்து கூடாக நிற்கின்றன.

மூன்று புறங்களில் இருந்தும் உக்ரைனுக்குள் ரஷ்ய ராணுவத்தினர் ஊடுருவியுள்ள நிலையில், அணி அணியாகப் பீரங்கிகள், போர்த்தளவாடங்களை ரயில் ரேக்குகளில் ஏற்றிக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளனர்.

உக்ரைனில் ரஷ்யப் படையினர் ஏழாம் நாளாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பிற நாடுகளில் அடைக்கலம் தேடிச் செல்வதற்காக ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர்.

கார்க்கிவ் நகரில் உள்ள நூற்றாண்டுப் பழைமையான மாலிசேவ் பீரங்கித் தொழிற்சாலை ரஷ்யாவின் குண்டுவீச்சுத் தாக்குதலில் தீப்பற்றி எரியும் காட்சி வெளியாகியுள்ளது.

 

உக்ரைனில் காவல்துறைக் கட்டடத்தின் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் அந்தக் கட்டடத்தின் உச்சியில் தீப்பற்றி எரிந்தது. எரிந்த பகுதிகள் பெயர்ந்து கீழே விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

உக்ரைனில் ரஷ்யப் படையினர் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் நகரங்களைவிட்டுப் பொதுமக்கள் சாரைசாரையாக வெளியேறிச் செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments