தொழிலதிபர் ஏ.வி.சாரதிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை

0 3167

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், கல்குவாரி தொழிலதிபரான ஏ.வி.சாரதியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், ஆற்காடு, சென்னை என மொத்தம் 28 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஆற்காட்டில் ஏ.வி.சாரதியின் வீடு, அவருக்கு சொந்தமான கல்குவாரி, அலுவலகங்கள் மற்றும் சென்னை பெரியமேட்டிலுள்ள அவரது வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் வந்து, வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளராக இருந்த ஏ.வி சாரதி, அண்மையில் திமுகவில் இணைந்ததாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments