இந்தியர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை... உதவிப்பொருட்களுடன் ருமேனியாவுக்கு புறப்பட்டு சென்ற விமானம்

0 1945

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை ருமேனியா வழியாக மீட்க சென்றிருக்கும் இந்திய விமானப்படையின் விமானம், உக்ரைன் மக்களுக்கான உதவிப் பொருட்களையும் கொண்டு சென்றுள்ளது.

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் இந்திய விமானப்படையின் மூன்று சி-17 விமானங்கள் போலந்து, ஹங்கேரி, ருமேனியா நாடுகளுக்கு செல்கின்றன.

அதில் ருமேனியா புறப்பட்டுச் சென்ற விமானத்தில் உக்ரைன் மக்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிப் பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன. உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், உதவி பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்தியர்களை மீட்க வருகிற 8-ந் தேதிக்குள் 46 சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் ஆபரேஷன் கங்கா நடவடிக்கையின் கீழ் ருமேனியா மற்றும் ஹங்கேரி வழியாக 616 இந்தியர்கள் மீட்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments