பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 4 ஆயிரம் சொகுசு கார்களுடன் கடலில் மூழ்கிய கப்பல்

0 3797

போர்ச்சுகல் மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் சொகுசு கார்களை ஏற்றி வந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டதால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 4 ஆயிரம் சொகுசு கார்களுடன் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.

 தீயை அணைக்கும் முயற்சியில் இழுவை படகுகள் களமிறக்கப்பட்டன. கப்பலில் இருந்த 22 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், தீயை அணைக்கும் முயற்சிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நீடித்து வந்தது.

ஆனால், கப்பலில் தீ கட்டுக்கடங்காமல் பரவியதால் தீயை அணைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. கடலின் அடியில் 2 மைல் ஆழத்தில் சரக்கு கப்பல் மூழ்கியுள்ளது. கப்பலில் இருந்து இதுவரை எரிபொருள் கசிவு ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments