உக்ரைனில் அடுக்குமாடி குடியிருப்புகளில் போடப்பட்டிருக்கும் சிவப்பு நிற குறியீட்டால் மக்கள் அச்சம்.. குறியீடுகளை பார்த்தால் உடனடியாக அழித்துவிடுமாறு அரசு வேண்டுகோள்

0 2967

உக்ரைனில் பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் குறியீடு போடப்பட்டிருக்கும் நிலையில், அது தாக்குதலுக்கு குறி வைத்து ரஷ்யா போட்ட குறியீடாக இருக்கலாம் எனவும், அதனை உடனடியாக அழித்துவிடுமாறும் மக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகர் கீவ் உள்ளிட்ட இடங்களை சுற்றி பெரிய பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் சிவப்பு நிறத்தில் குறியீடு போடப்பட்டுள்ளது.

இந்த குறியீடு ரஷிய ராணுவத்தினரால் குறிக்கப்பட்டிருக்கலாம் எனவும், குறியீடு உள்ள இடங்களை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்தக் கூடும் எனவும் கூறியுள்ள அதிகாரிகள், பொதுமக்கள் இதுபோன்ற குறியீட்டுகளை பார்த்தால் உடனடியாக அழித்துவிடவோ, அதனை மறைத்துவிடவோ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும், அந்த மாதிரி குறியீடுகளை கண்டால் உடனடியாக தகவல் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments