ஆந்திரா : தீ விபத்தில் சிக்கி கொளுந்து விட்டு எரிந்த பேருந்துகள்

0 1616

ந்திர மாநிலத்தில் மரக்கடை குடோனில் ஏற்பட்ட தீ வேகமாகப் பரவியதால் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 9 பேருந்துகள் எரிந்து சேதமடைந்தன.

பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மரக்கடை குடோன் அருகே இருந்த மைதானத்தில் 20க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. மதியம் மரக்கடை குடோனில் திடீரென ஏற்பட்ட தீ, அங்கிருந்த பேருந்துகள் மீது வேகமாகப் பரவத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

கொளுந்து விட்டு எரிந்த பேருந்துகளால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதற்குள் 9 பேருந்துகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments