ஓட்டலுக்குள் புகுந்த வீச்சரிவாள் வீராச்சாமி... தட்டி தூக்கியது போலீஸ்..!

0 3260

சென்னை அம்பத்தூரில் சாப்பிட்ட உணவிற்கு பணத்தை கொடுக்க மறுத்த 3 பேர் கும்பல், அரிவளால் ஓட்டலை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.

அம்பத்தூர் அடுத்த புதூர், புதிய அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது குடும்பத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் பிரேம்குமார் என்பவர் அசைவ ஓட்டல் ஒன்றை நடத்தி வந்தார்.

கடையில் பிரேம்குமாருடன் அவரது மனைவி இந்துஜாவும் கடையில் இருப்பது வழக்கம்.

சம்பவத்தன்று இந்த ஓட்டலுக்கு சுரேஷின் சகோதரர்களான ராஜேஷ் குடிபோதையில் சாப்பிட சென்றுள்ளார்.அப்போது சாப்பிட்டு முடித்த ராஜேஷ் 230 ரூபாய் பணம் கொடுக்காமல் தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் சாப்பிடத்தற்கான தொகையை வாடகையில் கழித்துக் கொள்ளுமாறு கூறி உள்ளார்.

வாடகையை சரியாக வாங்கிக் கொள்வதால் அதில் எப்படி கழித்துக் கொள்வது எனக்கேட்டு பிரேம்குமார் தட்டி கேட்டுள்ளார்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பணம் கொடுக்காமல் வீட்டுக்குச்சென்ற ராஜேஷ் தனது அண்ணன் சுரேஷ் மற்றும் நண்பரான கோகுல் ஆகியோரை அழைத்துக்கொண்டு ஓட்டலுக்கு வந்து வீச்சரிவாளுடன் கடை முன்பு ரகளையில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் அணிந்திருந்த டி- சர்ட்டை கழட்டி போட்டு விட்டு வீச்சரிவாள் வீராச்சாமியாக ஓட்டலுக்குள் புகுந்த சுரேஷ், ஓட்டலில் இருந்த கண்ணாடி பெட்டிகளை அடித்து உடைத்தார்

அவரது அட்டகாசத்துக்கு பயந்து ஓட்டலில் வேலை பார்த்தவர்கள் எல்லாம் அங்கிருந்து சிதறி ஓடினர்

பாதிக்கப்பட்ட ஓட்டல் உரிமையாளர் பிரேம்குமார் அளித்த புகாரின் பேரில் அம்பத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர், போலீசார் அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments