தமிழ்நாட்டில் ரேசன் கடைகள் இயங்கும் நேரம் மாற்றம்

0 6139

மிழ்நாட்டில், ரேசன் கடைகள் செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி ரேஷன் கடைகள், 2 ஷிப்டுகளில் இயங்க உள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகலில் 3 மணி முதல், இரவு 7 மணி வரையிலும் ரேசன் கடைகள் இயங்கும் எனவும், சென்னை தவிர்த்து இதரப் பகுதிகளில், காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் ரேசன் கடைகள் இயங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நேரத்தில் ரேசன் கடைகள் திறந்து செயல்படுகிறதா என்பதை மாவட்ட வழங்கல் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments