செல்போனை அடமானம் வைத்த தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை: தாய் மற்றும் மகன் கைது

0 1788

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே செல்போனை அடமானம் வைத்த தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்த வழக்கில், தாய் மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

மணலியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் அப்பகுதியில் கடை வைத்திருக்கும் ராஜமாணிக்கம் என்பவரின் செல்போனை வாங்கி பாரதிமோகன் என்பவருக்கு 700-ரூபாய்க்கு அடமானம் வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால், ராஜ்குமார் வீட்டுக்கு சென்று பாரதிமோகன் தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ராஜ்குமார் அவரது தம்பி பாலமுருகன், தாய் ரேணுகாதேவி ஆகியோர் பாரதிமோகன் வீட்டிற்கு சென்று அவரைத் தாக்கிவிட்டு தப்பி சென்றதாகக் கூறப்படுகிறது.

பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் பேரில் தாய், மகனை கைது செய்த போலீசார் ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY