மகள் திருமணத்துக்கு 33 ஆண்டுகளாக சேர்த்த 92 சவரன் நகை திருட்டு

0 2708

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல் மின் நிலைய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 92 சவரன் நகைகள் திருடு போனது.

வல்லூர் அனல்மின் நிலையத்தில் உதவி மேலாளராகப் பணி புரியும் சுரேஷ் சனிக்கிழமை குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

நேற்று மதியம் அவரது வீட்டு கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கவனித்த பக்கத்து வீட்டுக்காரர் இது குறித்து சுரேஷிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சுரேஷ் வீட்டிற்கு வந்து பார்த்த போது, மகளின் திருமணத்திற்காக 33 வருடங்களாக சேர்த்து வைத்த 92 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments