ரஷ்யா - உக்ரைன் போர் பதற்றம்.. இந்திய பங்குச்சந்தைகள் தொடக்கத்திலேயே சரிவு.!

0 2529

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் பதற்றம் 5-ம் நாளாக தொடரும் நிலையில் இன்று இந்திய பங்குச்சந்தைகள் தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தன.

இரு நாடுகளிடையே போர் தொடங்கிய நாள் முதலே இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன.

காலை 9.15 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 754 புள்ளிகள் சரிந்து 55,103 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 216 புள்ளிகள் சரிவடைந்து 16,441 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments