தூத்துக்குடியில் சொத்து தகராறு காரணமாக முதியவர்களை வீடு புகுந்து தாக்கிய 5 பேர்.!

0 2345

தூத்துக்குடி மாவட்டம் முத்துகிருஷ்ணாபுரத்தில் சொத்து தகராறு காரணமாக முதியவர்களை வீடு புகுந்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

பொன்னம்மாள், ஜான் ரவீந்திரன் தம்பதிக்கும், பொன்னம்மாளின் தம்பி ஞான திரவியம் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஞான திரவியம் குடும்பத்தினர் 5 பேர் சேர்ந்து சொத்தை எழுதித் தருமாறு கேட்டு பொன்னம்மாள், ஜான் ரவீந்திரன் தம்பதியை வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் தம்பதி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் உரிய விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments