ராமேஸ்வரம் மீனவர்களை துரத்திச் சென்று கைது செய்த இலங்கை கடற்படை.!

0 1590

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள நிலையில், மீனவர்களை இலங்கை கடற்படை துரத்திச் சென்று கைது செய்த வீடியோ வெளியாகி உள்ளது.

சனிக்கிழமை, தலைமன்னாருக்கும் இரணைதீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்ததோடு, படகையும் சிறை பிடித்தது.

மீனவர்களிடம் கிராஞ்சி கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்திய இலங்கை கடற்படை, மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.

இதனையடுத்து, கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை வரும் மார்ச் 11-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments