சென்னையில் குடிபோதையில் தகராறு செய்த அண்ணன், தம்பி.. தட்டிக்கேட்க வந்த காவலர்களையும் தாக்கியதால் இருவர் கைது.!

0 3511

சென்னை அம்பத்தூர் அருகே நள்ளிரவில் குடிபோதையில் தகராறு செய்த கல்லூரி மாணவர்கள் இருவர் தட்டிக்கேட்க வந்த காவலர்களையும் தாக்கியதாக கைது செய்யப்பட்டனர்.

கொரட்டூர் டி.வி.எஸ் நகரில் சனிக்கிழமை நள்ளிரவில் இளைஞர்கள் இருவர் அவ்வழியாகச் சென்றவர்களிடம் மது போதையில் தகராறு செய்துள்ளனர்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, கொரட்டூர் காவல் நிலைய ஏட்டு சீனிவாசன், ஊர்காவல் படை வீரர் ஆகாஷ்பாபு ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.

இளைஞர்களின் அட்டகாசத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்த ஆகாஷ்பாபுவை ஆபாசமாகப் பேசி இருவரும் தாக்கினர் என்று கூறப்படுகிறது.

ஏட்டு சீனிவாசனும் தாக்கப்பட்டார் என்று கூறப்படும் நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த தீபக்ராஜ் அவனது தம்பி ஜீவக்ராஜ் என இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments