ரஷ்யாவின் போர் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த உத்தரவிடுமாறு சர்வதேச நீதிமன்றத்தை நாடிய உக்ரைன்

0 1938
போரை நிறுத்த உத்தரவிடுமாறு சர்வதேச நீதிமன்றத்தை நாடிய உக்ரைன்

ரஷ்யாவின் போர் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த உத்தரவிடுமாறு உக்ரைன் சர்வதேச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், சர்வதேச நீதிமன்றத்தில் ரஷ்யாவுக்கு எதிராக புகார் கொடுத்திருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் நிகழும் போர்ச் சேதம் மற்றும் உயிரிழப்புக்கு ரஷியா முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் எனவும், ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த உக்ரைனில் இனப்படுகொலை நடப்பதாக சித்தரிப்பதை ரஷியா நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் போர் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த உத்தரவிடக்கோரிய தங்களின் வழக்கு அடுத்த வாரத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments