உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய தமிழக மாணவர்களை பூங்கொத்து வழங்கி வரவேற்றார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்.!

0 2137

உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய தமிழக மாணவர்களை, சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

ருமேனியா வழியாக உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 219 மாணவர்கள் சிறப்பு விமானம் மூலம் மும்பை அழைத்து வரப்பட்டனர்.

அதில் வந்த தமிழகத்தை சேர்ந்த 5 மாணவர்கள் இன்டிகோ விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.

அவர்களை அரசு சார்பில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

பின்னர் செய்தியாளார்களிடம் பேசிய அவர், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments