விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.!

0 1679

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்தார்.

மண்குண்டாம்பட்டியில் சண்முகையா என்பவருக்கு சொந்தமான ஆர்.எஸ்.ஆர் பட்டாசு தொழிற்சாலையில் சனிக்கிழமை வழக்கம் போல ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

அதில் படுகாயமடைந்த ஆலமரத்துப் பட்டியைச் சேர்ந்த 36 வயதான ராஜா, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ஆலையின் போர்மேன் ஒயிட் என்பவரை கைது செய்துள்ள போலீசார், தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளர் சண்முகையாவை தேடி வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments