ஓசூரில் ஹோட்டல் காவலாளியை கொன்று கல்லா பெட்டியில் இருந்த பணம் கொள்ளை.!

0 3215

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தனியார் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் காவலாளியை கத்தியால் குத்தி கொன்று விட்டு 17 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஓசூர் கமர்சியல் சாலை பகுதியில் உள்ள அந்த ஹோட்டலின் கூரையை உடைத்து, நள்ளிரவில் 3 மர்ம நபர்கள் புகுந்து, கல்லா பெட்டியை உடைக்க முயன்றுள்ளனர்.

அப்போது ஹோட்டலுக்குள் உறங்கிக்கொண்டிருந்த 60 வயது தாமோதரன் என்ற காவலாளி சத்தம் கேட்டு விழித்து கூச்சலிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தாமோதரனின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர். காலையில் கடையை திறந்த ஊழியர்கள், காவலாளி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments