உக்ரைனில் நிலைமை மோசமாக இருப்பதாக நாடு திரும்பிய இந்தியர்கள் தகவல்.!

0 1837

உக்ரைனில் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும், உயிர் பிழைக்க மக்கள் பதுங்குக் குழிகளில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், அந்நாட்டில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனில் இருந்து ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் வழியாக மீட்கப்பட்ட இந்தியர்கள் 250 பேருடன், இரண்டாவது ஏர் இந்தியா விமானம் இன்று காலையில் டெல்லி வந்தடைந்தது.

அதில் வந்தவர்களுள் ஒருவரான மகாராஷ்டிராவைச் சேர்ந்த சூரியா சுபாஷ், தாயகம் திரும்பியது நிம்மதி அளிப்பதாகக் கூறினார்.

தங்களது உயிரைக் காப்பாற்றியதற்காக மத்திய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இதே போல உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் சிலர், உக்ரைனில் நிலைமை மோசமாக இருப்பதாகவும் சரியான நேரத்தில் அரசு தங்களை மீட்டுக் கொண்டு வந்ததாகவும் கூறினர். மேலும், தங்களது படிப்பை பற்றி கவலையை வெளிப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments